தேர்தல் வன்முறை: நீதி விசாரணைக்கு உத்தரவு
சென்னை:மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஆதரவாளர்களால் திருவொற்றியூர்தொகுதிக்குட்பட்ட கே.வி.கே.குப்பம் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள்குறித்து நீதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மீனவர் கிராமம் கே.வி.கே.குப்பம்.கடந்த சட்டசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவுக்குவாக்களித்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த அமைச்சர் சாமியின் சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்தேர்தல் முடிவுக்குப் பின்னர் குப்பத்தில் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகசர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அமைச்சரின் சகோதரர்களின் மிரட்டலால் 200குடும்பத்தினர் குப்பத்தை காலி செய்து விட்டு காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில்உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்தவர்கள்சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று ஒரு உத்தரவைப்பிறப்பித்தது.
அதன்படி, கே.வி.கே. குப்பத்தில் நடந்த வன்முறை, 200 குடும்பங்கள்மிரட்டப்பட்டது ஆகியவை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு பதிவாளர் ஆர்.மாலா விசாரணைநடத்துவார்.
திருவொற்றியூர் முன்சீப் நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெறும்.
ஒரு மாதத்திற்குள் இந்த கமிஷன் தனது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும். கமிஷனுக்கும், கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம்,வாக்குமூலம் அளிக்கவுள்ளவர்களுக்கும் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதுகுறித்த ஆவணங்களைவைத்திருப்பவர்கள் எந்தவித பயம் இன்றி கமிஷன் முன்பு ஆஜராகி தங்களிடம்உள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் கமிஷன் முன்பு கொடுக்கலாம் என்றுநீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரின் தொகுதியில் நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாக விசாரிக்கவிசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications