தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தனது செயலாளரை அனுப்பிவைத்ததற்காக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை உயர்நீதிமன்ற நீதிபதிகோபாத்யாயா கடுமையாக கண்டித்தார்.
சென்னை மாநிகராட்சி தேர்தலை ரத்து செய்யவும், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தவழக்கு நேற்று 2வது நாளாக விசாரிக்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையர் சந்திரசேகரனும், மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரணும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள்கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
இதை ஏற்று பிற்பகலில் லத்திகா சரண் பெஞ்ச் முன்பு ஆஜரானார். ஆனால்சந்திரசேகரன் வரவில்லை. அவருக்குப் பதில் அவருடைய செயலாளர் வந்திருந்தார்.அவரைப் பார்த்ததும் கோபமடைந்த கோபாத்யாயா, ஒரு அதிகாரி ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர்தான் வர வேண்டும். அவருடையபியூனை எல்லாம் அனுப்பி வைக்க முடியாது என்று கோபமாக கூறினார்.
இதையடுத்து சந்திரசேகரனைத் தொடர்பு கொண்ட அவரது வழக்கறிஞர், நீங்கள்தான்வர வேண்டும், உடனடியாக கிளம்பி வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சந்திரசேகரன் கிளம்பி வந்தார்.
நீதிபதிகளைப் பார்த்து வணக்கம் என்று அவர் கூறியபோது, உங்களது வணக்கத்தைஏற்றுக் கொள்வதற்காக நான் இங்கே உட்கார்ந்திருக்கவில்லை என்று கோபம்குறையாத தொணியில் கூறினார் கோபாத்யாயா.