For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல் தூக்குத் தண்டனை தள்ளி வைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Afzalடெல்லி:குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள கருணை மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால்,நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குரு நாளை தூக்கிலிடப்பட மாட்டார் எனத் தெரிகிறது.

கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்டஅப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்சலுக்குதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

பலரை தூக்கிலிட்ட அனுபவம் கொண்ட மம் என்பவர் அப்சலையும் தூக்கிலிடுவதற்கு புக் செய்துவைக்கப்பட்டார். தூக்குக் கயிறும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் அப்சலின் மனைவி குடியரசுத் தலைவரிடம்வழங்கியுள்ள கருணை மனு மீது இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படாததால் திட்டமிட்டபடி அப்சலைத்தூக்கிலிட இயலாத நிலை ஏற்பட்டது.

சட்டப்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் கருணை மனு உள்ளபோது, யாரையும் தூக்கிலிட முடியாது.எனவே திட்டமிட்டபடி நாளை அப்சல் தூக்கிலிடப் படமாட்டார் எனத் தெரிகிறது. தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது.

அப்சலுக்கு கருணை காட்ட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத், முன்னாள் முதல்வர்பரூக் அப்துல்லா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X