பாப்பாபட்டி-தலித் பஞ்சாயத்து தலைவர் தேர்வு
மதுரை:நீண்ட நெடுங்காலமாக தலைவர் பதவிக்கு ஆளே இல்லாமல் இருந்து வந்தபாப்பாபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் கிராம பஞ்சாயத்துக்களுக்கு புதியதலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, நாட்டாமங்கலம், கீரிப்பட்டி மற்றும் விருதுநகர்மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்குத் தலைவர்பதவியில் யாரும் அமர முடியாத நிலை நிலவியது.
குறிப்பிட்ட ஒரு ஆதிக்க ஜாதியினரின் எதிர்ப்பு காரணமாக இங்கு எந்தத் தலித்வேட்பாளரும் போட்டியிட முன் வரவில்லை. அப்படியே மீறிப் போட்டியிட்டாலும்,வெற்றி பெற்றவுடன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டனர்.
இந் நிலையில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தபோதுபாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய பஞ்சாயத்துத் தலைவர்பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில் கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட பால்ச்சாமிபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது குடும்பத்துடன் அவர்கிராமத்தை விட்டு தலைமறைவாகி விட்டார்.
குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலுக்குப் பயந்தே அவர் ஊரை விட்டு ஓடி விட்டதாககூறப்படுகிறது.
மற்ற இரு பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில்பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கிராம மக்கள் சார்பில் நிறுத்தப்பட்டபெரியகருப்பன் என்பவர் வெற்றி பெற்றார்.
இவருக்கு 505 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட பால்சாமி என்பவருக்கு 291வாக்குகளும் கிடைத்தன.
வெற்றி பெற்ற பெரியகருப்பன் கூறுகையில், எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.ஊர் மக்களுக்கு சேவை செய்வேன். 5 வருட காலம் பதவியில் இருந்து மக்களுக்குசேவை செய்வேன் என்றார்.
நாட்டாமங்கலம் தலைவர் பதவிக்கு மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். இதில் ஊர்மக்களால் நிறுத்தப்பட்ட கணேசன் 359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கொட்டக்காச்சியேந்தல் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு யாரும்போட்டியிடாததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.