For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் ஷேடு இடிந்து 4 பெண்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:கரூர் அருகே சன்ஷேடு இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கரூர் அருகே மறவாபாளையம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிரமேஷ். இவர் மோகன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்துவந்தார்.

ரமேஷுக்கு அதிர்ஷ்ட லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பமாக இருந்தார்.நேற்று இரவு அதிர்ஷ்டலட்சுமியும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த வனிதா, மாரியாயி,செல்லம்மாள், பாலசுந்தரி ஆகியோர் வீட்டு முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் சன்ஷேடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷடலட்சுமி உள்ளிட்டபெண்களும், 7 வயது சிறுமி இலக்கியாவும் சிக்கிக் கொண்டனர்.அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது அதிர்ஷ்டலட்சுமி,இலக்கியா, பாலசுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் இறந்திருந்தனர்.

இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மாரியாயி, வனிதா ஆகியோர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X