மறு வாக்குப் பதிவு-ஆர்வம் காட்டாத மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் இன்றுநடந்த மறு வாக்குப் பதிவு அமைதியாகவும், மிக மந்தமாகவும் நடந்து முடிந்தது.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து தேர்தலை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைக்கஅவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தவும், மற்றவார்டுகளில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நேற்று காலை உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால், மாலையேஅங்கும் அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும், இன்று மறுவாக்குப் பதிவு நடப்பதால் வாக்கு எண்ணிக்கையை காலை 8 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2மணி முதல் வாக்கு எண்ணிக்கையை தொடங்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11, 12, 13, 15, 28, 59, 64, 69, 97,137, 147, 151 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டள்ளதால், வாக்குப் பதிவு அமைதியாக நடந்துவருகிறது. தேர்தலை அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

அமைதியாக வாக்குப்பதிவு நடந்தாலும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.இதனால் மிகமிக மந்தமாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

மறு வாக்குப் பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து அந்தவாக்குகளை எண்ணும் பணியும் உடனடியாகத் தொடங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+