தேர்தல் வன்முறை: 26ல் சிபிஎம் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:செனனை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறையைக் கண்டித்து வருகிற 26ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்சியின் தமிழ் மாநில குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெங்கட்ராமன் தலைமைதாங்கினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் கட்டமான அக்டோபர் 13ம் தேதி சென்னை மாநகராட்சித்தேர்தலில் நடைபெற்ற தேர்தல் அத்துமீறல்கள் அதிர்ச்சி அளிப்பவையாகும்.

அன்றைய தினம் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் பற்றிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிப்பதாகும். தேர்தல்களை முறையாக நடத்தும்பொறுப்பை ஏற்க வேண்டிய தேர்தல் ஆணையர், மாநகர காவல்துறை கண்காணிப்பாளர், சென்னை மாநகராட்சிஆணையர் ஆகியோர் கடமை தவறி விட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவே ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்ட சம்பவங்களை மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல்நிாளன்று கட்சியின் வேட்பாளர் தேவி மற்றும் தோழர்கள் மீது நடைபெற்ற வன்முறைகளுக்கு தலைமைதாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளிலும் அதேபோன்ற வன்முறை நடைபெற்ற இதர வார்டுகளிலும் மறு தேர்தல்நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தேர்தல் நாளன்று நடைபெற்ற நடந்தவன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும், சென்னையில் அக்டோபர் 26ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது என்று வரதராஜன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+