கவுன்சிலர்களின் அரசியல் லாங் ஜம்ப் ஆரம்பம்
மதுரை:திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக அதிருப்தி வேட்பாளர்தேர்தலில் வென்ற அடுத்த நாளே மீண்டும் திமுகவில் சேர்ந்துவிட்டார்.
இதேபோல திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் அமலி கிரேஸ் வெற்றி பெற்றஇரண்டே நாட்களில் திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 25வது வார்டில் திமுக சார்பில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்சின்னம்ாள். மேயராகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டவர். இந்த முறையும் இவருக்கே சீட்தரப்பட்டது.
இதனால் சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த மேற்குப் பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் அருண்குமார்அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்து போட்டியிட்டார்.
அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளரை எதிர்த்து தீவீரமாக பிரசாரம் செய்தார் அருண்குமார். அவருக்கு ஆதரவாகதிமுகவைச் சேர்ந்த பலரும் பிரசாரம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது, அருண்குமார் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 2,769வாக்குகளும், திமுக வேட்பாளர் சின்னம்மாளுக்கு 1,374 வாக்குகளும் கிடைத்தன.
வெற்றி பெற்றதும் அதற்கான சான்றிதழைப் பெற்ற அருண்குமார் நேராக அழகிரியின் வீட்டுக்குப் போய் அவரைசந்தித்து மீண்டும் திமுகவில் இணைந்தார். அழகிரியின் காலிலும் விழுந்து வணங்கினார். அப்போது கூடியிருந்ததிமுகவினர், அண்ணன் மன்னிச்சுட்டாரு என்று ஆரவாரமாக கை தட்டி கோஷமிட்டனர். (இது எப்டி இருக்கு??)
திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டதால்தான் அருண்குமாருக்கு வெற்றி கிடைத்ததாககூறப்படுகிறது. ஆனால் அவரோ ஓட்டுப் போட்டவர்களையும், வெற்றியையும் தூரப் போட்டு விட்டு அப்படியேஅலேக் ஆக மீண்டும் திமுகவுக்கு ஓடி விட்டதால் 25வது வார்டில் சலசலப்பு நிலவுகிறது.
அருண்குமாரைப் போல மேலும் சில மதுரை சுயேச்சைகளும் அரசியல் ஜம்ப் செய்ய தயாராகி வருவதாகக்கூறப்படுகிறது.
இதேபோல திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் அமலி கிரேஸ் என்பவரும்வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக மோதி வருகின்றன.இதற்காக இரு கட்சியினருமே தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை குறி வைத்து ரகசிய பேரத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திருமங்கலம் 4வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்அமலி கிரேஸ், தடாலடியாக திமுகவில் இணைந்துள்ளார். அழகிரியை சந்தித்த அவர் திமுகவில் இணைவதாகஅறிவித்தார்.
அமலி கிரேஸ் கடந்த நகராட்சியிலும் இதே வார்டில் அதிமுகவில்தான் இருந்தார். வட்ட பிரதிநிதியாகவும்செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது தடாலடியாக தாவி விட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவரது கணவர் சிவனாண்டி வார்டு அதிமுக செயலாளராக இருந்தவர். அவரும் இப்போது திமுகவில்ஐக்கியமாகி விட்டார். இவர்களுக்கு கட்சி தாவுவது புதிதில்லையாம். ஏற்கனவே காங்கிரஸில் இருந்த அவர்கள்பின்னர் அதிமுகவுக்குத் திரும்பினர். இப்போது திமுகவுக்குப் போயுள்ளனர்.
இந்தத் திடீர் தாவலால் திருமங்கலம் நகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது. தலைவர்பதவியைப் பிடிக்க இன்னும் 2 தலைகள் மட்டுமே தேவையாம்.