என் வீட்டுக்கே பணம் கொடுத்தார்கள்-விஜயகாந்த்
கடலூர்:ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மதுரை இடைத் தேர்தலில் என் வீட்டிற்கே வந்து பணம் கொடுத்தனர்என்று தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கான திட்டப் பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப்சிங் பேடியுடன் விவாதித்த லிஜய்காந்த் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறும், நல்லகாண்டிராக்டர்களிடம் பணிகளை கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முறையாகவும்,நேர்மையாகவும் நடந்திருந்தால் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஆளுங்கட்சியினரின் மிரட்டல்கள், பண பலம், முறைகேடுகளைத் தாண்டி நாங்கள் இந்த அளவுக்கு ஜெயித்ததேபெரிய விஷயம்.
இப்படி முறைகேடுகளை நடத்தி எல்லா இடங்களிலும் ஜெயித்ததற்குப் பதில் நேரடியாக தேர்தலே நடத்தாமல்நாங்கள்தான் அனைத்து இடங்களையும் நிர்வகிப்போம் என கூறியிருக்கலாம்.
மதுரை இடைத் தேர்தலில் என் வீட்டுக்கே வந்து பணம் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அங்குஆளுங்கட்சியினர் என்றில்லை, எதிர்க்கட்சியினரும் கூட பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை வளைக்கமுயன்றனர்.
இரு தரப்பினரும் கொடுத்த பணத்தை வைத்து மக்கள் தீபாவளிக்கு செலவழிக்க உள்ளனர். இந்த முடிவு நிரந்தரமல்ல. ஆளுங்கட்சி செய்த அராஜகத்திற்கு தமிழக மக்கள் வருங்காலத்தில் நல்ல தீர்ப்புசொல்வார்கள். இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம், மக்கள் மன்றத்தையே நாடுவோம் என்றார்விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications