நக்ஸல் ரகு சரணடையவில்லை: ஆந்திர டிஜிபி

Subscribe to Oneindia Tamil

Raghu with his wife Sudharaniஹைதராபாத்:சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்ட வழக்கில்தேடப்பட்டு வந்த ரகு என்கிற டெக் மது சரணடையவில்லை என ஆந்திர மாநிலடிஜிபி ஸ்வரன்ஜித் சென் கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து ஆந்திராவில் உள்ளநக்சலைட்டுகளுக்கு அனுப்பியதாக ரகு மற்றும் சுதாராணி ஆகியோரை போலீஸார்தேடி வந்தனர்.

சமீபத்தில் இருவரும் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் மாவட்ட எஸ்.பி. செளம்யான்னிலையில் சரணடைந்ததாக செய்திகள் வெளியாகின. அவர்களிடம் போலீஸார்வாக்குமூலம் பெற்றதாகவும், தீவிர விசாரணை நடந்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டது.

ஆனால் டெக் மதுவும், சுதாராணியும் சரணடையவில்லை என தற்போது ஆந்திரமாநில டிஜிபி ஸ்வரண்ஜித் சென் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

போலீஸாரால் தேடப்பட்டு வரும் டெக் மது என்கிற சீனிவாச ரெட்டியும், அவரதுதோழியும் போலீஸில் சரணடைந்ததாக எனக்குத் தகவல் இல்லை. இன்னும் இருவரும்தலைமறைவாகத்தான் இருக்கிறார்கள் என்றார் சென்.

இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரகு, சுதாராணி சரண்அடைந்ததாக வந்த தகவலை முதலில் வெளியிட்டவர் ஆந்திர மாநல உள்துறைஅமைச்சர் ஜனா ரெட்டிதான்.

இந் நிலையில் டிஜிபி முரண்பாடாக தகவல் வெளியிட்டுள்ளது பெரும் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது. சரண அடைந்ததாக கூறப்பட்டவர்கள் யார் என்ற கேள்வியும்எழுந்துள்ளது.

சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட சுதாராணி நக்ஸல் இயக்கத்தில் பெண்கள்பாலியல்ரீதியில் பாழ்படுத்தப்பட்டு வருவதாக வாக்குமூலம் தந்ததாக தகவல்கள்வந்தன. இது ஆந்திர போலீசார் விட்ட டுபாக்கூர் என்று தெரிய வந்துள்ளது.ஷ்ர

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+