பிரணாப்புக்கு வெளியுறவுத்துறை: பிரதமர் திட்டம்
டெல்லி:பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வெளியுறவுத்துறை அமைச்சராக்க பிரதமர் மன்மோகன் சிங்திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்தப் பதவியை ஏற்க முகர்ஜி தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இராக் எண்ணெய்க்கு உணவு திட்ட ஊழல் விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நட்வர் சிங்.அதிலிருந்து வெளியுறவுத்துறையை பிரதமரே நேரடியாக கவனித்து வருகிறார்.
இந் நிலையில் முகர்ஜியை பாதுகாப்புத்துறையில் இருந்து வெளியுறவுத்துறைக்கு மாற்றவும், பாதுகாப்புத்துறைக்குபுதிய அமைச்சரை நியமிக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், வெளியுறவுத்துறையை பிரணாப் விரும்பவில்லை. இதனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போய்க்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று தனது இல்லத்தில் மன்மோகன் சிங் புனித ரமலான் இப்தார் விருந்து அளித்தார். இதில்காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் குஜ்ரால், இஸ்லாமிய நாடுளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களை சந்தித்த பிரதமரிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தபிரதமர், விரைவில் சிறி அளவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications