மலை மலையாய் குவியும் வெற்றிகள்- கருணாநிதி
சென்னை:உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி மக்கள் தொண்டேமகேசன் தொண்டு என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை:
வெற்றியெட்டுத் திக்குமெட்டக் குவிக்கின்ற தம்பி;
வெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபடுவர் உழவர்;
பட்ட கடன் பல கோடி முழுவதையும் தீர்த்து
பசி தீர்க்கும் உணவுக்கும் அரிசி விலை அக்கணமே குறைத்து-
வாரம் இரு முட்டை சிறாருக்கு எனும் திட்டத்தை அளித்து;
யாரும் எதிர்பாராத பற்பல சாதனைகள் படைத்து
வாழும் குடில்களிலும் வண்ணத் தொலைக்காட்சி அமைத்து;
கையலகத் தரிசு நிலமெனினும்
கண்டிப்பாய் ஏழை விவசாயிக்கே அளித்து;
காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவையும் பலிக்க வைத்து
களிப்பிலாடும் மயிலாய் கானம் பாடும்
குயிலாய் மகிழ்ந்திட
கல்விக் கூட பிள்ளைகட்குக் கட்டணச் சுமையை இறக்கி;
மூதாட்டி பெயரால் இருந்த முத்தான திருமணத் திட்டம்
ஆகாட்டியென்ன திருமணமென்று அன்றைய ஆட்சியாளர் ரத்து செய்ய;
பரிவுடனே ஏழைப் பெண் மண விழாவுக்கு பதினைந்தாயிரம் ஈந்து
படித்து விட்டு வேலையின்றி அலைகின்ற இளைஞர்கட்கு
பணி கிடைக்கும் வரையில் திங்கள்தோறும் பண உதவி புரிந்து
கருவுற்ற பாவையர்க்கு கருணைத் தொகை ஆறாயிரம்;
கலந்தாய்வு முறையினிலே இட மாற்றம் ஆசிரியருக்கு
முதியோர் உதவித் தொகை மேலும் அதிகரிப்பு;
முதல் கட்டமாக மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு;
உடனடியாக புதுப்பித்து உழவர், நுகர்வோரை வாழ்வித்து;
ஊதியம், உழைப்போருக்கு உயர்த்தி, ஊக்கப்படுத்தி
போதிய பயன்களனைத்தும் மழையெனப் பொழிந்ததாலே- இந்த
ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கின்றோம் என்பது போன்றே
சாட்சிக்கு மக்களும் மழையாக பொழிந்துள்ளார் வெற்றிகளை..
ஆண்டுகொண்டிருந்தால் மட்டும் போதுமென்று கருதாமல்
யாண்டும் நமது பணி நாட்டாட்சியில் மட்டுமின்றி,
காடு மேடு கடந்து- பட்டி தொட்டி எங்கணும்
மக்கள் தொண்டே
மகேசன் தொண்டு எனத்
தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தால்-
மகத்தான வெற்றிகள் , மாபெரும் வெற்றிகள் எல்லாம்
மலை மலையாய் குவியும் நம் முன்னே
அலை அலையாய் அணிவகுப்பர் மக்கள் நம் பின்னே..












Click it and Unblock the Notifications