சிறுமி கற்பழித்து கொலை-செக்ஸ் சைக்கோ கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரையில் பூ விற்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும், இன்னொருசிறுவனை கொடூரமாகவும் கொலை செய்த வாலிபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Nagasanthiமதுரை ஜெய்ஹிந்புரம் பகுதியைச் சேர்ந்த பூக் கடைக்காரர் மணிவாசகம். இவரதுகுடும்பத்தினரும் பூ வியாபாரம் செய்கின்றனர். இவரது மகள் நாகசாந்தியும் (வயது 8)கூடையில் பூக்களை வைத்து தெருத் தெருவாக சென்று விற்பனை செய்வார்.

Selvamநேற்று காலை முதல் நாகசாந்தியைக் காணவில்லை. அவரது குடும்பத்தினர்நாகசாந்தியை தேடியபோது, வீட்டுக்குள்ளேயே இருந்த ஒரு டிவி பெட்டியில்பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தியின்குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, மணிவாசகத்தின் பூக் கடையில்வேலை பார்த்து வந்த செல்வம் என்ற வாலிபரை தேடிப் பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், நாகசாந்தியை பாலியல் பலாத்காரம் செய்துகொன்று விட்டதாக தெரிவித்தார் செல்வம். மேலும் கடந்த மாதம் அவனியாபுரம்பகுதியில் ஒரு சிறுவனைக் கொன்று முட்புதரில் வீசி விட்டதாகவும் செல்வம்கூறியுள்ளான்.

போலீசாரிடம் செல்வம் அளித்துள்ள வாக்குமூலம்:

நான் சிறுவர், சிறுமியரை ஏமாற்றியும் மிரட்டியும் செக்ஸ் வைத்துக் கொள்வேன்.அவர்கள் உடன்படாவிட்டால் தாக்குவேன். எனது தாக்குதலில் அனுப்பானடியைச்சேர்ந்த ஏகநாதன் (11) என்பவன் இறந்துவிட்டான்.

கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பூக்கடை நடந்தி வந்தமணிவாசகத்திடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவர் பூ கட்டும் வேலையும் தந்துவீட்டிலேயே தங்கவும் அனுமதித்தார்.

மணிவாசகத்தின் வீட்டில் அவரது மகள் நாகசாந்தியை அனுபவிக்க நினைத்தேன்.நேற்று முன் தினம் தீபாவளி என்பதால் பூ வியாபாரம் அதிகமாக இருந்தது.மணிவாசகம் கடையில் பிஸியாக இருந்தார்.

நான் வீட்டுக்கு வந்தேன். அங்கு நாகசாந்தி மட்டும் தனியே டிவி பார்த்துக்கெண்டிருந்தாள். அப்போது அவளிடம் பேசி ஆசைக்கு அழைத்தேன். அவள் புரிந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவளை வாயைப் பொத்தி பலாத்காரம் செய்யமுயன்றேன். ஆனால், அவர் தாக்கினாள்.

இதனால் அவளது கைகளை கட்டிப் போட்டுவிட்டு செக்ஸ் வெறியை தீர்த்துக்கொண்டேன். ஆனாலும் அவள் அலறியபடியே இருந்தாள். இதனால் பயந்து போய்அவளது கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் அவள் இறந்துவிட்டாள்.

இதையடுத்து அவளது உடலை சாக்குப் பையில் போட்டு கட்டி, டிவி பெட்டிக்குள்போட்டிவிட்டு கடைக்கு வந்தேன். மணிவாசகத்திடம் ஊருக்குப் போகிறேன் என்றுசொல்லி காசு வாங்கிக் கொண்டு மேல அனுப்பானடியில் உள்ள என் உறவினர்வீட்டுக்குப் போனேன்.

அங்கு சாப்பிட்டுவிட்டு ஊரை விட்டு கிளம்ப இருந்தேன். அந்த நேரத்தில்மணிவாசகத்தின் உதவியோடு போலீசார் என்னை உறவினர் வீட்டில் வைத்து மடக்கிவிட்டனர் என செல்வம் கூறியுள்ளான்.

அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+