விஜயகாந்த் ரசிகர்கள் ரகளை: போலீஸ் தடியடி
கடலூர்:கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், விஜயகாந்த் நடித்த தர்மபுரி படத்தைக் காண வந்தவிஜயகாந்த் ரசிகர்கள், பாடல் காட்சி ஒன்றை மறுபடியும் போடக் கூறி ரகளையில்ஈடுபட்டதால் போலீஸார் தியேட்டருக்குள் புகுந்து தடியடி நடத்தினர்.
தீபாவளியையொட்டி விஜயகாந்த் நடித்த தர்மபுரி படம் ரிலீஸாகியுள்ளது. கடலூர்மாவட்டம் பண்ருட்டியிலும் இப்படம் திரையிடப்பட்டது.
முதல் நாள் படக் காட்சியின்போது பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர்களும் அமர்க்களமாககட்டப்பட்டிருந்தன.
முதல் காட்சியின்போது ரசிர்கள் விஜயகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டபடியும்,விசலிடித்தபடியும் உற்சாகமாக படத்தைப் பார்த்தனர். ஒரு பாடல் காட்சியின்போதுஅந்தப் பாடலை திரும்பப் போடுமாறு கூறி ஆபரேட்டரை வலியுறுத்தினர்.
ஆனால் அடுத்த காட்சிக்கு தாமதமாகி விடும் என்று கூறி பாடலை திரும்ப ஒளிபரப்பதியேட்டர் நிர்வாகம் மறுத்தது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். தியேட்டரின்இருக்கைகளை அடித்து நொறுக்கினர். ஆபரேட்டர் அறைக்குள் புகுந்து அவரையும்அடிக்க முயன்றனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டிஅடித்தனர். அடிபட்ட ரசிகர்கள் கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்துசாலை மறியல் நடத்தினர். அங்கும் விரைந்து வந்த போலீஸார் அவர்களை மீண்டும்தடியடி நடத்திக் கலைத்தனர்.
பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தியேட்டரில் சேதத்தைவிளைவித்தவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications