வேலையற்றோருக்கு உதவி: நவ. 11ல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:வேலையற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகைத் திட்டத்தை நவம்பர் 11ம் தேதி திருச்சியில் முதல்வர்கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தைதமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்தாவது, பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பை முடித்தவேலையற்றோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
இவர்கள் படிப்பை முடித்து, வேலை வாய்ப்பகத்தில் பதிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். பத்தாவதுவகுப்பு படித்தோருக்கு மாதம் ரூ. 150ம், பிளஸ் டூ படித்தோருக்கு ரூ. 200ம், பட்டப் படிப்பு படித்தோருக்கு மாதம்ரூ. 300ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தை நவம்பர் 11ம் தேதி திருச்சியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அதே நாளில்அமைச்சர்கள் மாவட்டங்களில் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.












Click it and Unblock the Notifications