புதிய கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய கவுன்சிலர்கள்நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு கடந்த 13மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் வாக்குப் பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது.
6 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ள கவுன்சிலர்கள்மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விரிவாகசெய்யப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகளில் மொத்தம் 473 கவுன்சிலர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்கள்.
இதேபோல புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3,391 நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் 983 மூன்றாம் நிலைநகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைப்பர்.
8,780 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்கள். இதேபோல மற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் நாளையே பதவியேற்றுக் கொள்வார்கள்.
சென்னை தவிர மற்ற 5 மாநகராட்சிகளில் 28ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது.இதேபோல அன்றைய தினமே பிற நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்நடைபெறுகிறது.
சென்னையில் 29ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது.