பெரியாறு: தமிழக முடிவுக்கு கேரளா வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதற்கு கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமசந்திரன்வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்மத்திய அரசின் முன்னிலையில், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அதில் பலன் கிடைக்காவிட்டால்உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவாகியுள்ளது.

இந்த முடிவை கேரள அரசு வரவேற்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர்,சிறந்த அனுபவசாலி. அதேபோல கேரள முதல்வர் அச்சுதானந்தனும் அனுபவம் நிறைந்த தலைவர். எனவேஎல்லாப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று ஒருபோதும் கேரளா கூறியதில்லை. பேச்சுவார்த்தையை தொடங்கசாதகமான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டுத்தான், நல்லெண்ண அடிப்படையில் நெய்யாற்றிலிருந்து கேரளஅரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடிவு செய்தது என்றார் பிரேமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+