தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
புனித ரமலான் மாத முடிவைக் குறிக்கும் வகையில், ஷவ்வால் மாத பிறை நேற்று மாலை தென்பட்டதைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசின் தலைமை காஜியார் முகம்மதுசலாஹுதீன் அய்யூப் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இணைந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர்.இதேபோல தமிழகம் முழுவதும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.
ரம்ஜான் கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. காலை முதலேமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும் கொண்டாட்டங்களுக்கு இடையூறுஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications