நூற்பாலையில் தீவிபத்து: இளம் பெண் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் நடந்தபெரும் தீ விபத்தில் இளம் பெண் பலியானார். பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம்ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த பஞ்சுப் பொதிகளில் பிடித்த தீ படு வேகமாகபரவியதால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.இந்த தீவிபத்தில் தென்காசியைச் சேர்ந்த ஷேபனா என்ற இளம் பெண் பரிதாபமாககருகி உயிரிழந்தார்.
இத் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கசிவேதீவிபத்துக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications