மன்மோகன், சோனியா சென்னை வருகை
சென்னை:பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நவம்பர் 4ம் தேதி சென்னைவருகிறார்கள்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விமானவியல் பயிற்சி மையம்அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 4ம் தேதி நடக்கிறது.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமரும், சோனியா காந்தியும் சென்னை வருகின்றனர். இதில் தமிழகமுதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.
வருகிறார் வேல்ஸ் இளவரசர்:
இதேபோல வேல்ஸ் இளவரசர் நவம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தபயணத்தின்போது கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்து,பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுகிறார்.