புகுந்த வீட்டில் மண்ணைக் கவ்விய கேப்டன்
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளையும், கவுன்சிலர் பதவிகளையும்கைப்பற்றியுள்ள விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு அவரது சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் அடிகிடைத்துள்ளது.
மாநகராட்சிகளில் 16 கவுன்சிலர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளைக்கைப்பற்றி பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது தேமுதிக.
மதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட கூடுதல் இடங்களில் வென்று அக்கட்சிகளுக்கு பெரும் சவாலாகமாறியுள்ளது விஜயகாந்த்தின் கட்சி. இப்படி தமிழகம் முழுதும் வெற்றிக் கொடி நாட்டியுள்ள தேமுதிகவுக்கு,அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் சொந்தத் தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், 2 வார்டுகளில் மட்டுமே தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கான 19 கவுன்சிலர்களில் தேமுதிகவிலிருந்து ஒருவர் கூடஜெயிக்கவில்லை. அந்தத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுகளில் 5ல் மட்டுமேதேமுதிகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
கங்கைகொண்டான் பேரூராட்சியில் 2 வார்டிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1 வார்டிலும் மட்டுமேதேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியேகிடைத்தது.
பிறந்த ஊரான மதுரையில் 9 வார்டுகளைக் கைப்பற்றி திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தகேப்டன், புகுந்த வீடான விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்வியுள்ளார்.












Click it and Unblock the Notifications