திமுகவில் அதிமுக-மதிமுக டிஸ்மிஸ் கவுன்சிலர்கள்
சென்னை:அதிமுகவிலிருந்தும், மதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்ட சென்னை மாநகராட்சிகவுன்சிலர்கள் இருவர், முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றநான்கு பேரில் சுபாஷ் சந்திரபோஸும் ஒருவர். இவரும், புவனேஸ்வரி என்றஇன்னொரு கவுன்சிலரும் கட்சி மேலிட உத்தரவுப்படி தங்களது கவுன்சிலர் பதவியைராஜினாமா செய்யாத காரணத்தால், கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று காலை இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர்இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, சுயேச்சையாகசெயல்படுவோம் என்று தெரிவித்தனர்.
இதேபோல கட்சி மேலிட உத்தரவை ஏற்று ராஜினாமா செய்யாத காரணத்தால்மதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் அக்கட்சியின் ஒரே கவுன்சிலரான கன்னியப்பன்.
இந் நிலையில் சுபாஷ் சந்திரபோஸும், கன்னியப்பனும் நேற்று இரவு முதல்வர்கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் சேர்ந்தனர்.நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமா.சுப்ரமணியமும், துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசத்யபாமாவும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications