உள்ளாட்சி: 355 காலியிடங்களுக்கு டிச.ல் தேர்தல்?
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 355 பதவியிடங்களுக்கு டிசம்பர் 15ம்தேதிக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரம் பதவியிடங்களுக்கு சமீபத்தில் இரண்டு கட்டமாகதேர்தல் நடந்தது. இதில் 18,000 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற இடங்களுக்கு நடந்ததேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தத் தேர்தலில் 348 இடங்களுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதில் ஊரகப் பகுதிகளில் 318காலியிடங்களும், நகர்ப்பகுதிகளில் 30 காலியிடங்களும் உள்ளன. இதுதவிர தேர்தலுக்குப் பின்னர் 7 பேர்மரணமடைந்தனர். இதனால் மொத்தம் 355 பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த 355 பதவியிடங்களுக்கும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம்தீர்மானித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யாத பல வார்டுகள் பொதுப் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்டவகுப்பினருக்கு மாற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான் அந்த வார்டுகளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.348 வார்டுகளிலும் மனுதாக்கல் நடக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம்தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. ஆட்சித் தலைவர்கள் அதற்கு பதில் அளித்த பின்னர் 355காலியிடங்களுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications