குடும்பத்தையே காவு வாங்கிய கள்ளக் காதல்!
சென்னை:மகனின் கள்ளக்காதலால் அவமானமடைந்த அவரது பெற்றார் மற்றும் அண்ணன் ஆகியோர் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குருவாட்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர்வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா. இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் பார்த்திபன் என 2மகன்கள் உள்ளனர்.
சேகரின் வீட்டுக்கு அருகே டெல்லி ராணி (40) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்தவர்.குழந்தைகள் இல்லாத இவர் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும், 18 வயதே ஆன பார்த்திபனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடிதனிமையில் சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்த அசிங்கம், சேகர் குடும்பத்துக்குத் தெரிய வந்தது. ஊரிலும் இதுபரவவே சேகர் தம்பதியினர் அவமானமடைந்தனர்.
பார்த்திபனைக் கண்டித்துள்ளனர். ஆனால் காமம் தலைக்கேறிய நிலையில் இருந்த பார்த்திபன் அதைகண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து டெல்லி ராணியுடன் சல்லாபமாக இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த சேகர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதைகலாவும், விக்னேஷும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தனித் தனியாக புடவையால் தூக்குப் போட்டுக்கொண்டு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications