வெளி மாநில தமிழ் மாணவர்களுக்கு பரிசு திட்டம்
சென்னை:தமிழை ஒரு பாடமாக கொண்டு பயிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் மாணவ, மாணவியருக்கு பரிசுத்திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பிற மாநிலங்களில் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவ,மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விலும், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ. 10,000, 2ம் பரிசு ரூ. 5,000, 3ம் பரிசு ரூ. 3,000 என பரிசுகள் வழங்கப்படும். டெல்லி,மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம்செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் ரூ. 2.16 லட்சம் செலவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி முன்பு அறிவித்தார். அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகியமாநிலங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண்கள் பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்.
இனி ஒவ்வொரு ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications