வெளிநாட்டு வேலை: 2வது இடத்தில் தமிழகம்
சென்னை:வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.கேரளா முதலிடத்தில் உள்ளது.
வெளி நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பது குறித்த ஒருபுள்ளி விவரத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கேரள மாநிலத்தவர்கள் தான் முதலிடத்தைப் பெறுகிறார்கள். 2005ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5.49லட்சம் பேர் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 22.8 சதவீதம் பேர் கேரளாவைச்சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 21.3 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகதொழிலாளர்கள் (13.7%) உள்ளனர். குஜராத் (9.1%), ஆந்திரா (8.8%), மகாராஷ்டிரா (5.3%), பஞ்சாப் (4.4%),ராஜஸ்தான் (3.9%) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த 2001ல் 2.79 லட்சம் தொழிலாளர்களாக இருந்தது. வெளிநாட்டு வேலைக்குசெல்வோரில் 80 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களில் 35.4 சதவீதம் பேர் ஐக்கியஅரபு எமிரேட்டுக்கும், 18.2 சதவீதம் பேர் செளதி அரேபியாவுக்கும் செல்கின்றனர் என்று அந்தத் தகவல்தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications