இந்தியா வரும் இலங்கை அனைத்துக் கட்சிக் குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்திய அரசியல் சட்டம், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகுறித்து தெரிந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழுஇந்தியா வந்துள்ளது.

இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவில் உள்ளதைப் போன்ற பெடரல் ஆட்சிமுறையை (மத்திய-மாநில அரசுகள்) இலங்கையிலும் அமல்படுத்தலாம் எனஇலங்கைக்கு இந்தியா யோசனை தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு உதவுவதற்கு சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைஅனுப்பி வைப்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 15 பேர்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவை அதிபர் ராஜபக்ஷே நியமித்தார்.

இந்தக் குழு, இலங்கையில் எப்படியெல்லாம் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளலாம்என ஆராயவுள்ளது. அதன் ஒரு பகுதியாக இக்குழு இந்தியா வந்துள்ளது. இந்தியஅரசியல் சட்டத்தின் மக்கிய அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள்,பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகள், அதன் கட்டமைப்பு உள்ளிட்டவைகுறித்து தங்களது இந்திய பயணத்தின்போது இக்குழு அறிந்து கொள்ளவுள்ளது.

வரும் 29ம் தேதி இக்குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. கர்நாடகம் மற்றும்கேரள மாநிலங்களுக்கும் இக்குழு விஜயம் செய்யவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+