மலேசிய சாலை விபத்தில் செந்தில் உறவினர் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த கார் விபத்தில் காமெடி நடிகர் செந்திலின்உறவினர்கள் 2 பேர் பலியாயினர்.
கோலாலம்பூரில் வசித்து வருபவர் காளியண்ணன். இவர் செந்திலின் உறவுக்காரர்.மலேசியாவில் செட்டிலாகி அங்கேயே வசித்து வருகிறார்.
காளியண்ணன் தனது மனைவி ஷீலா மற்றும் 3 குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமைகாரில் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
விமான நிலையத்தை நெருங்கியபோது காரின் பின் பக்க டயர் திடீரென வெடித்துச்சிதறியது. இதனால் கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில்காளியண்ணனும், ஷீலாவும் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகளும் காயத்துடன்உயிர் தப்பினர்.
காயமடைந்த 3 குழந்தைகளும் உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications