ஜெ சொத்து வழக்கு: நவ-25க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு பெங்களூர்தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும்,லண்டன் ஹோட்டல் வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்த இரு வழக்கையும் சேர்த்து விசாரிக்க தனிநீதிமன்றம் முடிவு செய்தது.
இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவைவிசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணைக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம்விதித்துள்ள இடைக்காலத் தடை நீக்கப்படாதை சுட்டிக் காட்டிய நீதிபதி முனோலி, அரசு வழக்கறிஞர்ஆச்சார்யாவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வழக்கை நவம்பர் மாதம் வரை தள்ளி வைக்கலாம் என ஆச்சார்யா யோசனை தெரிவித்தார். ஆனால்ஜெயலலிதா உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டிசம்பர் மாதம் வரை வழக்கை தள்ளிவைக்க கோரினார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிபதி முனோலி, நவம்பர் 25ம் தேதிக்கு வழக்குவிசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications