மிரட்டல்: பிரதமரின் கேரள வருகை ஒத்திவைப்பு
டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில்,அவரது கேரள பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மனமோகன் சிங் நவம்பர் 1ம் தேதி கேரளாவுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திலிருந்து கேரள முதல்வர்அச்சுதானந்தன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மிரட்டல் இ-மெயில் வந்தது.
அதில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளஅப்சலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர்மன்மோகன் சிங் கேரளாவுக்கு வரும்போது அவரை கொலை செய்வோம் எனமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கேரள போலீஸாரும், மத்திய உளவுப் பிரிவு போலீஸாரும் தீவிரவிசாரணை நடத்தி இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் பிரதமரின் கேரள பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. அவரது கேரள சுற்றுப்பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications