கன மழை-நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி;தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக நெய்வேலியில் மின் நிலையத்தில்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாகசென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால்நெய்வேலி டவுன்-ஷிப் மற்றும் சுரங்கப் பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ளன.
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் மழை நீர் புகுந்துவிட்டது. இதனால் நிலக்கரிவெட்டி எடுப்பது தடைபட்டுள்ளது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின்நிலையத்தில் நேற்று இரவு முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மழையில் நனைந்துஈரமாகிவிட்டதால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை.
இந்த அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் தினமும் 600 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படும். ஆனால், நேற்று முதல் 170 மெகா வாட் மின்சாரம் மட்டுமேஉற்பத்தியாகிறது.
மேலும் முதல் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது ஸ்டேஜில் 420 மெகா வாட்மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு மின் உற்பத்தி 380 மெகா வாட்டாககுறைந்துவிட்டது.
இரண்டாம் பிரிவு அனல் மின் நிலையத்தில் 1,470 மெகா வாட் மின்சாரம்உற்பத்தியாகிறது. ஆனால், இங்கு மின் உற்பத்தி 420 மெகா வாட்டாககுறைந்துவிட்டது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் பர்னஸ் ஆயிலை கொண்டு இப்போது மின் உற்பத்திசெய்யப்படுகிறது. மழை தொடர்ந்தால் இந்த உற்பத்தியும் கூட பாதிக்கப்படும் நிலைஉள்ளது.












Click it and Unblock the Notifications