திமுக துரோகம் செய்யாது: கருணாநிதி
சென்னை:கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒருபோதும் துரோகம் செய்யாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில்திமுகவினரால் பாமக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் மீது கட்சித் தலைமைநடவடிக்கை எடுத்துள்ளது.
பாமகவுக்கு மிகக் குறைந்த பலமே உள்ள சில இடங்களில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு திமுக உதவியுள்ளது.
கீழ் மட்டத்தில் நடந்த தவறுகளால் பாமக மட்டுமின்றி கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும்பாதிக்கபப்ட்டுள்ளது.கூட்டணியை பலப்படுத்தும் நோக்கிலேயே திமுக செயல்படுகிறதே ஒழிய, ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்குதுரோகம் செய்யாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications