நாளை தேவர் குருபூஜை: பலத்த பாதுகாப்பு
சென்னை:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியலிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவருமான பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஒரே தினத்தில் வருவதால் அது குருபூஜையாககொண்டாடப்படுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர்30ம் தேதி இரு நிகழ்ச்சிகளும் குருபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி பசும்பொன் கிராமத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் வந்தவண்ணம் உள்ளனர். பல்வேறுகட்சியினரும் குருபூஜையில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக ஒவ்வொருகட்சிக்கும், அமைப்புக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குருபூஜையையொட்டி 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குருபூஜையின்போது தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் பூஜை இந்த ஆண்டு நடைபெறாதுஎன கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications