For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தை தோல்வி: யாழில் கடும் சண்டை

By Staff
Google Oneindia Tamil News

ஜெனீவா:ஜெனீவாவில் இலங்கை அரசுத் தரப்புக்கும், விடுதலைப் புலிகள் குழுவுக்கும் இடையே நடந்த 2 நாள்பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில்கடும் சண்டை மூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நார்வே அமைதிக் குழுவின் முயற்சியால் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2 நாள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் இலங்கை அரசின் தரப்பில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தலைமையிலான 8 பேர் குழுவும்,தமிழ்ச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட புலிகள் குழுவும் கலந்து கொண்டன.

நார்வே அமைதித் தூதர் ஜோன்சன் பேயர் தலைமையிலான நார்வே குழுவும் அமைதிப் பேச்சுவார்த்தையில்பங்கெடுத்தது. யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதியையும் இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலையை திறக்கவேண்டும் என பேச்சுவார்த்தையின்போது புலிகள் தரப்பு வற்புறுத்தியது.

ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் எந்தஉடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தமிழ்ச் செல்வன், நிமல் ஸ்ரீபாலா, நார்வே அமைச்சர் எரீக் சோல்ஹீம் ஆகியோர்கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சோல்ஹீம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சாலையைத் திறக்க வேண்டும் என புலிகள் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் இதைஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

புலிகள் தரப்பில் பேசிய ஜார்ஜ், எங்களது கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால்உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால்எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது.

நார்வே தூதுக் குழுவும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசை வலியுறுத்தி எங்களதுகோரிக்கையை ஏற்கச் செய்ய உதவ வேண்டும் என்றார். யாழ்ப்பாண சாலையை திறக்க இலங்கை அரசு மறுத்துவிட்டதால் ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே யாழ்ப்பாணம் பகுதியில் கடும் சண்டைமூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் கடும் பீரங்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல்கள்கூறுகின்றன. இந்த சண்டையால் தமிழர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தா நல்லதம்பி என்பவர் கூறுகையில், மீண்டும் பெரிய அளவில் போர் வெடிக்கும்சூழல் ஏற்பட்டுள்ளது. 8வது முறையாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கை ராணுவம் இனிதாக்குதலை ஆரம்பிக்கும். பதிலுக்கு புலிகளும் தாக்குவார்கள். போர் தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறதுஎன்று கவலை தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X