மழை நிவாரண நிதி ரூ. 50,000 ஆக உயர்வு
சென்னை:தமிழகத்தில் பருவ மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ. 50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை பருவமழைக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது.
முந்தைய அரசு ஆணைப்படி, பருவ மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. இந்த உதவியின் அளவை அதிகரிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியாக வழங்க புதியஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10,000 வழங்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மாவட்ட அமைச்சர்களும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டபிரதிநிதிகளும், அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் விரைந்து ஈடுபடவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.