நவ. 11 முதல் வேலையற்றோர் உதவித் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி நவம்பர் 11ம் தேதிதிருச்சியில் தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில்பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம்நிதியுதவி வழங்கப்படும்.

அதன்படி பத்தாவது வகுப்பு முடித்தோருக்கு மாதம் ரூ. 150 நிதியுதவியும், பிளஸ் டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.200 உதவியும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.110 கோடி செலவாகும். 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இத்திட்டத்தை வருகிற நவம்பர் 11ம் தேதி திருச்சியில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.

அதே நாளன்று, திருவள்ளூரில் அமைச்சர் அன்பழகனும், மதுரையில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்,கிருஷ்ணகிரியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், பிற மாவட்டங்களில் மற்ற அமைச்சர்களும் இத்திட்டத்தைத்தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+