தெ.ஆ. பயணம்: இந்திய அணி அறிவிப்பு
மொஹாலி(சண்டிகர்):தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை இந்தியகிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
சாம்பியின்ஸ் டிராபி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட இந்திய கிரிக்கெட் அணிதென்ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அங்கு 5 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிவிளையாடவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ளவுள்ள 16 பேர் கொண்ட அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த பல தொடர்களில் சேர்க்கப்படாமல் இருந்து வந்த சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே,வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதேபோல வாசிம்ஜாபரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
காயமடைந்துள்ள யுவராஜ் சிங், அஜீத் அகர்கர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்வாகவிட்டால், அவர்களுக்குப் பதில் திணேஷ் கார்த்திக்மற்றும் வி.ஆர்.வி. சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவர்.
செளரவ் கங்குலியின் பெயரை தேர்வுக் குழுவினர் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை என்று தேர்வாளர்குழுத் தலைவரான வெங்சர்க்கார் தெரிவித்தார்.
இந்திய அணியின் விவரம்: டிராவிட் (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், முகம்மதுகைப், வாசிம் ஜாபர், சுரேஷ் ரெய்னா, அணில் கும்ப்ளே, திணேஷ் மோங்கியா, முனாப் பட்டேல், ஜாகிர் கான்,ஸ்ரீசாந்த், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், பதான், தோணி, அஜீத் அகர்கர் (வி.ஆர்.வி. சிங்), யுவராஜ் சிங் (திணேஷ்கார்த்திக்).












Click it and Unblock the Notifications