வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்
சென்னை:வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின்கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த ஓக்னி புயல், நேற்று பிற்பகலில்தான் ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்தபுயலுக்கு அங்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிநலையில் வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் தேங்கிய தண்ணீர் இன்னும் அகலாமல்அப்படியே உள்ளதால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே நிலைதான் தலைநகரின் பல்வேறு பகுதிகளிலும்நிலவுகிறது. மடிப்பாக்கம், ராம்நகர், துரைப்பாக்கம் ஆகிய புறநகர்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications