ராமதாஸ் புகாரில் உண்மை இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது உண்மை அல்லஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை துணை மேயருக்கான வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவரே நிர்ணயிப்பதா என்று பாமகநிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கேட்டுள்ளது நியாயமான கேள்விதான்.

அப்படி தோழமைக் கட்சி ஒன்றின் மீது நான் அதிகாரம் செலுத்திடவோ, ஒரு பதவி பெற்றுத் தரவோ உரிமைஇருப்பதாக எண்ணி, அந்த முயற்சியில், நான் ஈடுபட்டிருந்தால், அது தவறுதான். ஆனால் என்ன நடந்ததுஎன்பதை நான் விளக்கினால், மற்றொரு கட்சியின் வேட்பாளர் பிரச்சினையில் நான் தலையிட்டதாகக் கூறப்படும்பழிச் சொல் நீங்கும் என்று நம்புகிறேன்.

சென்னை துணை மேயர் பதவிக்கு பாமக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என டாக்டர் அய்யா எனக்கு கடிதம்அனுப்பினார். அந்தப் பதவிக்கு திமுக சார்பில் சத்யபாமா என்ற ஒரு தலித் பெண்மணியை, சென்னையிலேஉள்ள மக்கள் தொகையில், கணிசமான பகுதியினர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றஅடிப்படையில்;

ஏற்கனவே பத்திரிகைகளில் அறிவித்து விட்ட காரணத்தால், அவரைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லும்போதுஅந்த இடத்தில் வேறு ஒரு தலித் பெண்மணியை பாமக சார்பில் நிறுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்,பிரச்சினையும் வராது என்றும் யோசனை சொன்னேன்.

அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து, அப்படியானால் துணை மேயர் பதவியே வேண்டாம் என்ற பதில்தான் வந்தது.நடந்தது இப்படியிருக்க நான் ஒரு வேட்பாளரை பாமக மீது திணித்ததாக கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லைஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+