யாழ்.சாலை: புலிகளுக்கு இலங்கை நிபந்தனை
கொழும்பு:இலங்கை ராணுவம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் நிறுத்தினால், யாழ்ப்பாணத்திற்கு செல்லும் முக்கியநெடுஞ்சாலையை திறப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமீபத்தில் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது யாழ்ப்பாணத்தையும், நாட்டின் இதர பகுதிகளையும் இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலையை இலங்கைஅரசு திறக்க வேண்டும் என புலிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இக்கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்விஅடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே இலங்கையின் வட பகுதியில்புலிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் கடுமையான பீரங்கிச் சண்டையில் இறங்கினர். இதனால் தமிழர்களிடையே போர் பீதிஅதிகரித்தது. வவுனியாவில் ராணுவ வாகனம் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார், 3ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்தினால், யாழ்ப்பாணம் சாலையை திறப்பது குறித்துயோசிப்போம் என்று இலங்கை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சரும், ஜெனீவா பேச்சுவார்த்தையில் இலங்கை குழுவுக்குத் தலைமைவகித்துவருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா கூறுகையில், புலிகள் முதலில் தாக்குதலைக் கைவிட வேண்டும்.அப்படி செய்வதாக இருந்தால் யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையைத் திறப்போம்.
முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். இதற்கு புலிகள் தரப்பு உத்தரவாதம் கொடுக்குமானால் நாங்கள்சாலையைத் திறப்போம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் டிசில்வா.
இலங்கை அரசின் இந்த புதிய வாய்ப்பு குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும்வெளியிடப்படவில்லை. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹீரோக்கள் தினத்தின் போது புலிகளின் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து பிரபாகரன் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், பொய்யானதகவல்களைக் கொடுத்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகளை இலங்கை அரசுதடுத்து விட்டது.
மீண்டும் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்த அது தயாராகி வருகிறது. ஆனால் எங்களதுமக்களைக் காக்க நாங்கள் தீவிரமாக போர் தொடுப்போம். அதற்கான தலைமையின் உத்தரவுக்காக எமது வீரர்கள்காத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications