புது வழக்கில் சேகர்பாபு எம்எல்ஏ கைது
சென்னை:பெட்ரோல் வெடிகுண்டுகளை விநியோகித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளஅதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, உள்ளாட்சித் தேர்தலின்போது கார் ஒன்றை அடித்துநொறுக்கியதாக இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தபோது பெரும் வன்முறைமூண்டது. இந்த சமயத்தில் அதிமுகவினர் பலரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.வும், வட சென்னை மாவட்ட அதிமுகசெயலாளருமான சேகர்பாபுவும் கைது செய்யப்பட்டார். பழவந்தாங்கல் நகராட்சித்தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக ரவுடிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைஏற்பாடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்ந்துதலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சேகர்பாபுவை இன்னொரு வழக்கிலும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலன்று, தண்டையார்பேட்டை வரதப்பா ஹோம்முன்பு நடந்த மறியலின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது டாடா சுமோ காரை10 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்ததாக சரவணன் என்பவர் போலீஸில் புகார்கொடுத்தார்.
இந்தப் புகார் தொடர்பாக தற்போது சேகர்பாபுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.இதுதொடர்பாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டைப் பெற்ற போலீஸார்மத்திய சிறைக்குச் சென்று அதை சேகர்பாபுவிடம் காட்டி கைது செய்து அவரிடம்கையெழுத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய வழக்கில் அவரை ஜார்ஜ் டவுன் 14வது நீதிமன்றத்தில்போலீஸார் சேகர்பாபுவை ஆஜர்படுத்தினர். அப்போது ஜாமீன் கோரி சேகர்பாபுசார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனைதெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து புதிய வழக்கில் சேகர்பாபுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், முதல்வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதிலும் கிடைத்தால்தான்அவரால் விடுதலையாகி வெளியே வர முடியும்.












Click it and Unblock the Notifications