கற்பனையில் உளறும் ஜெ.: பொன்முடி தாக்கு
சென்னை:பண்ருட்டி நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக தோற்றதற்கு திமுக மீதும், என் மீதும் ஜெயலலிதா பழிசொல்வது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: உள்ளாட்சித் தேரத்லில் படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாஏதேதோ காரணங்களைத் தேடி கூறிக் கொண்டிருக்கிறார்.
அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு விழுப்புரம் மாவட்டச்செயலாளரான என் பெயரை இழுத்துள்ளார். பண்ருட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது என்பது கூட அவருக்குத்தெரியவில்லை.
தான் திருடி பிறரை நம்பாள் என்பது பழமொழி. கடந்த தேர்தலில் அவர்கள் செய்த தில்லுமுல்லுகளைஇப்போதும் செய்திருப்பார்களோ என்று கற்பனையில் ஜெயலலிதா உளறி வருகிறார்.
திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்கக் காரணம் என நடுநிலையாளர்கள் பாராட்டினாலும் அதை ஏற்க முடியாதஜெயலலிதா தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
முன்னுக்குப் பின் முரணாக பேசி பேசி குழியில் விழுந்து விட்ட அதிமுகவின் மீது மேலும் மண்ணைக் கொட்டிநிரப்பி வருகிறார் ஜெயலலிதா. அவருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் பொன்முடி.












Click it and Unblock the Notifications