ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 18 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது மின்சார ரயில்மோதியதில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக பலியாயினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் அருகே இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிலர்ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை ஆட்டோ கடக்க முயன்றது. அப்போது திருமால்பூர் என்றஇடத்திலிருந்து செங்கல்பட்டுக்குச் சென்ற மின்சார ரயில், ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. மோதியவேகத்தில் ஆட்டோவும், அதில் இருந்தவர்களும் கூழாகி பரிதாபமாக இறந்தனர்.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் ஆட்டோவை டிரைவர் ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது.

சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 18 பேர் இறந்து விட்டனர். இறந்தஅனைவரும் அடையாளமே தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் விரைந்து வந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+