வருகிறார்கள் சுற்றுலா காவலர்கள்!
சென்னை:தமிழகம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவவும், பாதுகாப்பு அளிக்கவும் சுற்றுலாக் காவலர்கள் திட்டம் அறிணிகப்படுத்தப்படவுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அங்கீகாரம் இல்லாத கைடுகள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது தவிர மேலும் பல பிரச்சினைகளும் உள்ளன.
இவற்றைத் தடுக்கவும், தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் சுற்றிப் பார்க்க வசதியாக சுற்றுலா காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ணிதல் கட்டமாக சோதனை அடிப்படையில், மகாபலிபுரம், ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாத் தலங்களில் இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த ஐந்து இடங்களிலும் ஒரு போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். அங்கு ஒரு ஏட்டு, ஐந்து காவலர்கள் இருப்பார்கள். இதுதவிர சுற்றுலா பயணிகளுக்கு உரிய தகவல்களை அளித்து வழி காட்டுவதற்கு 400 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியை ணிடித்த பின்னர் இந்த ஐந்து இடங்கள் தவிர சென்னை, தஞ்சை, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய ஊர்களிலும் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்தியில் கையேடு வெளியிடப்படும். ணிதல் கட்டமாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடு இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ஏற்காடு ஆகிய இடங்களில் தனியார் உதவியுடன் ரோப் கார் வசதி செய்யப்படும்.
இதுதவிர மதுரைக்கு ஹெலிகாப்டர் சேவையும் ஏர்படுத்தப்படும். இதுதொடர்பாக தனியார் நிறுவனமான பவன்ஹன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் சுரேஷ் ராஜன்.












Click it and Unblock the Notifications