For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவரை அவமதித்து விட்டது திமுக அரசு: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

பசும்பொன்:முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அரசு விழாவை ரத்து செய்து, பின்னர் அவசரம் அவசரமாக ஏற்பாடுசெய்து தேவருக்கு அவமரியாதை செய்து விட்டது திமுக அரசு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில்குருபூஜையையொட்டி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், சாதி மதத்திற்குஅப்பாற்பட்ட பசுன்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் இன்று புண்ணியத் தலமாகி உள்ளது. இது இன்னும்வளமாக வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இத்தருணத்தில் இந்த ஆண்டு காலையில், அரசு விழாவை ரத்து செய்ததுஅரசு. இது தேவர் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பையே வெளிப்படுத்துகிறது.

தேவர் மீது உண்மையான மதிப்பு இல்லாத நிலையில் அரசை எதிர்த்து மக்கள் கொந்தளிப்படைவார்கள்என்பதால்தான் அரசு விழாவை அவசரம் அவசரமாக மாலையில் திமுக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X