மனைவியிடம் செக்ஸ் சித்ரவதை: கணவர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:நீலப்படம் காட்டி அதேபோல தன்னுடனும் உறவு கொள்ளுமாறு கூறி மனைவியைசித்திரவதை செய்த கணவனை குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பப் பெண்கள் கணவரிடம் அனுபவிக்கும் சித்திரவதைகளிலிருந்து மீள்வதற்குவசதியாக சமீபத்தில் குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதலாவதாகநெல்லையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இப்போது சென்னையில் இதே சட்டத்தின் கீழ் ஒருவர் கைதாகியுள்ளார். அவரது பெயர்சிவக்குமார். சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியையான சாருமதிக்கும் இடையே கடந்தநான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்னர் சாருமதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால்சிவக்குமாரின் தாயாரும், சகோதரியம் சேர்ந்து சாருமதியைகொடுமைப்படுத்தியுள்ளனர். பெண் குழந்தை பெற்றதற்காக திட்டித் தீர்த்தனர்.

கணவர் குடும்பத்தாரின் கொடுமையால் தனது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார் சாருமதி. கூடுதலாக வரதட்சணை பணத்தை வாங்கிக் கொண்டு வந்துகொடுமைகளை சகித்துக் கொண்டு கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சிவக்குமார் செக்ஸ் வக்கிரத்தை காட்டி சாருமதியைகொடுமைப்படுத்தி வந்துள்ளார். அடிக்கடி நீலப் படங்களை போட்டுக் காட்டி அதில்வருவது போலவே தன்னுடன் உறவு கொள்ளுமாறு சாருமதியை துன்புறுத்தியுள்ளார்.

அதற்கு சாருமதி சம்மதிக்கா விட்டால் மிருகத்தனமாக அடித்து உதைத்துக்கொடுமைப்படுத்துவாராம். மேலும், வேறு பெண்களிடம் போய் தான் விரும்பியபடிஉல்லாசம் அனுபவித்துள்ளார்.

இந்த நிலையில்தான், சாருமதியிடம் டியூஷன் படிக்க வந்த ஷாலினி என்றமாணவியை தனது வலையில் வீழ்த்தினார் சிவக்குமார். அவருடன் சேர்ந்து பலஇடங்களுக்கும் போய் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த உண்மை சமீபத்தில்தான் சாருமதிக்குத் தெரிந்துள்ளது. சிவக்குமார்குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது.அதை தற்செயலாக எடுத்துப் பார்த்த சாருமதி, ஷாலினியும், சிவக்குமாரும் முத்தம்கொடுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற படம் இருந்தது.

மேலும் ஷாலினியும், சிவக்குமாரும் பல்வேறு கோணங்களில் படுத்திருப்பது,ஷாலினியின் நிர்வாணப் படங்களும் அதில் இருந்தன.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாருமதி, இதற்கு மேலும் இவருடன் வாழமுடியாது என்று முடிவு கட்டி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

பெற்றோர் வீட்டுக்கு அவர் சென்று 3 மாதங்களாகியும் கூட தொடர்ந்து சாருமதியைவீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்துள்ளார் சிவக்குமார். பணம் கொடு, வீட்டுக்கு வாஎன்று வற்புறுத்தியுள்ளார்.

பொறுத்துப் பார்த்த சாருமதி, தனது கணவர் செய்யும் கொடுமைகளை விளக்கி மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றஆணையர், விசாரணைக்கு உத்தரவிட்டார்.

உதவி ஆணையர் ரசல் சாம்ராஜ் நடத்திய விசாரணையில் செல்போன் ஆதாரம்உள்ளிட்டவற்றை சாருமதி கொடுத்தார். இதையடுத்து சிவக்குமார் மீது வரதட்சணைக்கொடுமை, தவறான உறவுக்கு கட்டாயப்படுத்துதல், குடும்பப் பெண்கள்வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மாணவி ஷாலினி, சிவக்குமாரின் அம்மா சுந்தரி, அக்கா கலையரசிஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கைத் தொடர்ந்து சிவக்குமார்தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+