For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்முறையில் கண் இழந்தவருக்கு திமுக உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:அதிமுகவினருடன் நடந்த மோதலில் கண்ணை இழந்த திமுக தொண்டருக்கு அக்கட்சியின் சார்பில் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி ரூ. 1லட்சம் நிதியுதவி அளித்தார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தியாகி துளசிங்கம், நடந்து முடிந்த சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது, அதிமுகவினர் நடத்தியவன்முறை காரணமாக, அதிமுக வேட்பாளரின் கணவர் மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்டு இடது கண்துளைக்கப்பட்டுள்ளார்.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவனை சிகிச்சைக்குப் பிறகும், கண் இருந்த இடத்தில் ஒரு ஆழமான புண்ணைப்பெற்றிருக்கிறார்.

இவரது கண்ணைப் பெயர்த்த அந்த காட்டுமிராண்டி மனிதர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர்அலைகின்றனர். திமுக வெற்றிக்காக பாடுபடும்போது கண்ணைப் பறிகொடுத்த துளசிங்கம்-சென்னை 153வதுவட்டச் செயலாளர்-இப்படி எத்தனையோ கொடிய நிகழ்ச்சிகளுக்கிடையே தான் சென்னையில் நமதுவெற்றியைக் காண முடிந்தது என்பதற்கு இதுவே சாட்சி.

இடது கண் துளைத்தெடுக்கப்பட்ட துளசிங்கத்திற்கு நிதி உதவியாக ரூ. 1லட்சத்தை திமுக தலைமைக் கழகம்சார்பில் முதல்வர் கருணாநிதி வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X