பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாமி!
பெங்களூர்:கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் மற்றும் மைசூர், மங்களூர், பெல்காம், ஷிமோகா ஆகிய நகரங்களின்பெயர்கள் இன்று முதல் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பெலகாமி, ஷிவமுகா என பெயர் மாற்றம்செய்யப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களின் பெயர்கள் தங்களது பழைய பெயருக்கு மாறிக் கொண்டுள்ளன. முதலில்பம்பாய், மும்பை ஆனது. பின்னர் கல்கத்தா கொல்கத்தா ஆனது. பிறகு மெட்ராஸ் சென்னை ஆனது. சமீபத்தில்பாண்டிச்சேரி புதுச்சேரியாக மாறியது.
இந்த நிலையில் கர்நாடகத்தின் ஐந்து முக்கிய நகரங்களின் பெயர்களை பழைய பெயர்களுக்கே மாற்ற அம்மாநிலஅரசு முடிவு செய்தது. தலைநகர் பெங்களூர், மைசூர், மங்களூர், ஷிமோகா, பெல்காம் ஆகிய நகரங்களின்பெயர்களை பெங்களூரு, மைசூரு, ஷிவமுகா, பெலகாமி, மங்களூரு என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று நடைபெறும் ராஜ்யோத்சவாவிழாவின்போது இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று வெளியிடுகிறார்.
பெயர் மாற்றம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாகவே பெயர்களை மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இன்று முதல் மேற்கண்ட ஐந்து நகரங்களின் பெயர்களும் அவற்றின் பழைய பெயரிலேயே அழைக்கப்படும் எனகர்நாடக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications