வணிகர் போராட்டத்தில் வன்முறை: பஸ்கள் எரிப்பு
டெல்லி:டெல்லியியல் வணிகர்கள் இன்று 3வது நாளாக நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள்தீ வைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் கடைகள் வைக்க டெல்லி மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது.குடியிருப்புகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 1ம் தேதி முதல் சீல் வைக்கும் பணியை மேற்கொள்ளஉத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்த வணிகர்கள் கடந்த 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். 3வது நாளான இன்றும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. விகாஸ் மார்க் என்ற இடத்தில் 3 பேருந்துகளுக்கு தீவைத்துஎரிக்கப்பட்டது. கல் வீச்சிலும் வணிகர்கள் இறங்கினர். இதனால் அவர்களை போலீஸார் தடியடி நடத்திக்கலைத்தனர்.
நொய்டா சாலையிலும் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள்போராட்டம் நடத்தி வருவதால், தலைநகரம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications