வெள்ளத்தில் சிக்கிய யானைக் குட்டி மீட்பு!
கோவை:தமிழக, கேரள எல்லையில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த யானைக் குட்டியை வனத்துறைஅதிகாரிகளும், போலீஸாரும் பத்திரமாக மீட்டு தாயுடன் சேர்த்தனர்.
தமிழக, கேரள எல்லையில், ஆணைக்கட்டி அருகே உள்ள கொடுந்துறை பள்ளம் என்ற காட்டுப் பகுதியில்தொடர் மழை காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது ஆற்றைக் கடக்க இரண்டு யானைக் குட்டிகள் முயன்றுள்ளன. ஆனால் காட்டாற்று வெள்ளத்தில்இரண்டும் சிக்கிக் கொண்டன.
இரண்டு குட்டிகளையும் மீட்க மற்ற யானைகள் முயன்றன. அதில் ஒரு குட்டியை மட்டும் மேலே தூக்கி விட்டன.ஆனால் இன்னொரு குட்டி யானையை மீட்க முடியவில்லை. அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
யானைக் குட்டி காட்டு வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்த்த பழங்குடியின மக்கள் சிலர் வனத்துறைக்குத்தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினரும், போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர்.
உள்ளூர் மக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அனைவரும் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கித் தவித்தயானைக் குட்டியை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
கரை சேர்த்த பின்னர் குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் காட்டுக்குள் அதுவிடப்பட்டது. காட்டுக்குள் தவிப்புடன் காத்திருந்த தாய் யானையை நோக்கி குட்டி யானை ஓடியதைப் பார்த்தஅனைவரும் கை தட்டி மகிழ்ந்தனர்.